Wednesday, September 21, 2011

3. பேருந்தின் காட்சி

மல்லிகை முல்லை
அல்லி ரோசா
போன்ற மலர்களைசுமந்த
பூந்தோட்டம் போன்ற
மகளிர் பேருந்தும்
பாட்டும் படிப்பும்
அரட்டையும் செய்யும்
மாணவர்களை கொண்ட
கல்லூரி பேருந்துகளும்
செல்லும் சாலையில்
பள்ளமும் மேடும்
கடந்துவரும் குளிரூட்டும்
பேருந்தொன்று தென்பட்டது

Tuesday, September 20, 2011

2. குமரன் வருகை

பசித்தும் உண்ணாமல்
உணவில்லாத ஒருவனுக்கு
கொடுத்து மகிழ்பவனும்
இனிய சொல்பேசி
பிறரை மகிழ்விப்பவனும்
திறமையும் வலிமையையும்
தன்னகத்தே கொண்டும்
பொறுமையால் பலவற்றை
கையல்பவனும் பெண்கள்
கணிமைகாது காணும்
அழகை உடையவனை
குமரன் என்பர்.

1. கயல்விழி ஓட்டம்

பொய்கையும் தன்கையும்
உடல்தழுவ குளித்ததும்
மழைநின்றதும் இலைசிந்தும்
துளிபோல நீர்சிந்தியது
அவளது கூந்தலோடு
கைபையை எடுத்துகொண்டு
கடைதெரு வழியே
புலிவிரட்டிய மான்போல
வேகமாக ஓடினால்
அவளூடும் காட்சியை
கண்டோர் இவள்தேவதையோ
தனதுபாதம் கிழூன்றாமல்
ஊடுகின்றலே என்றனர்
இவ்வாறு பேருந்து
நிலையம் செல்பவளை
கயல்விழி என்பர்.